உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு திட்டக்குடி அருகே துணிகரம்

2 வீடுகளில் நகை, பணம் திருட்டு திட்டக்குடி அருகே துணிகரம்

திட்டக்குடி: இரு வீடுகளின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமுத்து மனைவி மணிமேகலை,72; இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி தனியாக வசிக்கிறார். இவர், நேற்று முன்தினம் வழக்கம் போல், இரவு சாப்பிட்டு, வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் உறங்கினார். நேற்று காலை 6:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகர பெட்டியின் அருகே மக்காச்சோளம் கூடையில் இருந்த 8 சவரன் நகை, 15,000 ரூபாய் ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. அருகிலுள்ள சக்திவேல் வீட்டிலும் 8,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அருள் வடிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை