விருத்தாசலத்தில் சம்பா அறுவடை பணி தீவிரம்
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் சம்பா அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. விருத்தாசலம் அடுத்த ஆலிச்சிக்குடி, கம்மாபுரம், பெண்ணாடம், சின்னவடவாடி, வயலுார், எ.வடக்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் போர்வேல், கிணறு, ஏரி பாசனம் மூலம் சம்பா சாகுபடி செய்கின்றனர். நடப்பாண்டும் சம்பா அறுவடை துவங்கி உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள், அறுவடை செய்யும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளனர்.