மேலும் செய்திகள்
இன்று இனிதாக (28.02.2025) திருவள்ளூர்
28-Feb-2025
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஸ்ரீசீதா லட்சுமண அனுமன் சமேத ஸ்ரீகோதண்டராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
28-Feb-2025