சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் பட்டாடை அணிந்து, ஆஸ்தான சேவையில் அருள்பாலித்தார்.விழாவையொட்டி காலை உற்சவர் பெருமாள் உள்புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.