உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில வில்வித்தை போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை

மாநில வில்வித்தை போட்டி; கடலுார் மாணவர்கள் சாதனை

கடலுார்; திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., அகாடமி சி.பி.எஸ்.பி., பள்ளியில், லோட்டஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடந்தது. கடலுார் உட்பட பல மாவட்டங்களில் இருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். கடலுார் டைகர் இண்டர்நேஷ்னல் வில்வித்தை பயிற்சி மையத்தை சேர்ந்த 60 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 36 மாணவர்கள் தங்க பதக்கம், 11 மாணவர்கள் வெள்ளி பதக்கம், 7 வெண்கல பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில், கடலுார் அணி முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.இம்மாணவர்களை, கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் கராத்தே ராஜா, மவுண்ட் லிட்ரா ஜீ பள்ளி தாளாளர் கவிதா, லையன்ஸ் சங்க தலைவர் திருமலை, டைகர் இண்டர்நேஷ்னல் வில்வித்தை பயிற்சி மைய பயிற்சியாளர் சுரேஷ்குமார் பாராட்டினர். பயிற்சியாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை