குத்துச்சண்டை போட்டியில் மாணவருக்கு தங்கப் பதக்கம்
நெல்லிக்குப்பம்: மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் திருக்கண்டேஸ்வரம் பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளனர். நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் நடந்தன. கைப்பந்து,கால்பந்து,ஓட்ட பந்தயம்,குத்துச்சண்டை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. குத்துச்சண்டை போட்டியில் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவன் ரோஹித் தங்க பதக்கமும் 8ம் வகுப்பு மாணவி கவிநிலா வெள்ளி பதக்கமும் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் தேவனாதன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசு வழங்கினர்.