மேலும் செய்திகள்
விவசாயி தற்கொலை
25-Jan-2025
நடுவீரப்பட்டு : பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நடுவீரப்பட்டு அடுத்த சன்னியாசிப்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி,57; இவர், திருமாணிக்குழி வடிவேல் என்பவருடன் பைக்கில் கடலுார் - பண்ருட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். பைக்கை வடிவேல் ஓட்டினார். பாலுார் கடை வீதி அருகில் சென்ற போது, எதிர்பாராத விதமாக பைக் வேகத் தடையில் ஏறி இறங்கியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், பலத்த காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி இறந்தார். வடிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Jan-2025