உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் சிசு சடலமாக மீட்பு நெய்வேலியில் பரபரப்பு

பெண் சிசு சடலமாக மீட்பு நெய்வேலியில் பரபரப்பு

நெய்வேலி: நெய்வேலியில் முட்புதரில் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது. கடலுார் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 30ல் என்.எல்.சி., நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சவுக்கு தோப்பு உள்ளது. இவ்வழியாக நேற்று காலை சென்றவர்கள் துர்நாற்றம் வீசுவதை அறிந்தனர். அருகில் உள்ள முட்புதரில் சென்று பார்த்த போது , பெண் சிசுவின் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.தகவலறிந்த டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் அழகிரி ஆகியோர் சம்பவ விரைந்து வந்து சிசுவின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து தர்மல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், சிசு கடந்த 2 நாட்களுக்கு முன் பிறந்தது தெரிந்தது. தவறான உறவு காரணமாக பிறந்த சிசு என்பதால் முட்புதரில் வீசப்பட்டு இறந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசு இறந்த சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ