உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  

கடலுாரில் நேற்று வெயில் சதமடித்தது  

கடலுார் : கடலுாரில் நேற்று வெப்பம் அதிகரிப்பால் மீண்டும் வெயில் (100.04) சதமடித்தது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன் தினம், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் 2 நாட்கள் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இருப்பினும் அதற்கு மாறாக நேற்று வெயில் அதிகரித்தது. வெப்ப காற்று வீசியது. நேற்று அதிகபட்சமாக 100.04 டிகிரி பதிவானது. வெப்பக்காற்றினால் அவதிப்பட்ட மக்கள் குளிர்பானக்கடைகளில் குவிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ