திருக்குறள் கருத்தரங்கு
புவனகிரி, ; புவனகிரியில் திருக்குறள் இயக்கம் சார்பில், திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது.திருக்குறள் இயக்கத் தலைவர் உதயசூரியன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன் வரவேற்றார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராமானுஜம் பரிசு வழங்கி பேசினார்.பொருளாளர் ராபர்ட் நன்றி கூறினார்.