உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

 பள்ளியில் திருக்குறள் பயிலரங்கம்

கடலுார்: சிதம்பரம் அடுத்த ஜெயங்கொண்டபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் பயிலரங்கம் நடந்தது. தலைமை ஆசிரியர் மதி தலைமை தாங்கினார். ஆசிரியர் விண்ணரசி மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் உலகத் திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, திருக்குறள் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார். ஆசிரியர்கள் உஷா, மணிமொழி ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர். விழாவில் ஆசிரியர்கள் சோபியா, சங்கீதா செண்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை