மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத முதியவர் சடலம்
14-Jul-2025
கடலுார் : கடலுார் பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த ஆண் சடலத்தை போலீசார் கைப்பற்றி விசாரிக்கின்றனர். கடலுார் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்குமிடத்தில் உள்ள பயணிகள் இருக்கை அருகே 50 வயது மதிக்கத் தக்க நபர் இறந்து கிடந்தார். இறந்தவர் பிஸ்கட் கலர் சட்டை, சிமெண்ட் கலர் சட்டை அணிந்திருந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. புகாரின பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
14-Jul-2025