மேலும் செய்திகள்
முதியவர் சடலம்; போலீசில் புகார்
13-Oct-2025
கடலுார்: அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலுார், ரெட்டிச்சாவடி அடுத்த மேல் அழிஞ்சிப்பட்டு புறவழிச்சாலை பஸ் நிறுத்தம் அருகே நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் பச்சை நிற சட்டை அணிந்திருந்தார். குறித்து வி.ஏ.ஓ., புஷ்பராஜ் அளித்த புகாரின் பேரி்ல், ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Oct-2025