மேலும் செய்திகள்
சாலையில் சாய்ந்த சிக்னல் கம்பம்
16-Jun-2025
விருத்தாசலம் நகரில் சிக்னல் கம்பங்கள் காட்சிப் பொருளாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்கின்றனர். இதனால், விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.விருத்தாசலம் உட்கோட்ட தலைமையிடமாக இருப்பதால் அரசு அலுவலகங்கள், வங்கிப் பணிகள், கல்வி நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்களுக்கு திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், மந்தாரக்குப்பம், மங்கலம்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.மேலும், சென்னை - ஜெயங்கொண்டம், சிதம்பரம் - சேலம், கடலுார் - திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்கள், விருத்தாசலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.இதனால், அதிக வாகன போக்குவரத்து இருந்தாலும், நகரில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விருத்தாசலம் பஸ் நிலையம், பாலக்கரை, நீதிமன்ற முகப்பு, ரயில்வே ஜங்ஷன், ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தம், கடைவீதி நான்குமுனை சந்திப்பு பகுதிகளில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன. அதனை சரிவர பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.நாளடைவில் சிக்னல் கம்பங்கள் பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக மாறியது. கடலுார் - விருத்தாசலம் - சேலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதுபோல், விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையும் விரிவாக்கம் செய்து, பரந்து விரிந்து காணப்படுவதால் வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையை கடக்க முடியாமல் தடுமாறும் நிலை உள்ளது.மேலும், நகர சாலைகள் அனைத்தும் விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. இதனால் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, விருத்தாசலம் நகரில் காட்சிப்பொருளான சிக்னல் கம்பங்களை சீரமைத்து, பச்சை, சிவப்பு, மஞ்சள் விளக்குகள் குறித்த நேரத்துடன் இயங்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலக்கரையில் அதிகம்
பாலக்கரை ரவுண்டானா வழியாக கடலுார், திருச்சி, வேப்பூர், உளுந்துார்பேட்டை மார்க்க வாகனங்கள் கடக்கின்றன. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் குறிப்பிட்ட இடத்தில் பஸ்களை நிறுத்தாமல், ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். அவர்கள் ரவுண்டானாவை கடந்து செல்ல முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, பாலக்கரை பஸ் நிறுத்தத்தில் வழக்கமான பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்கிட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
16-Jun-2025