வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவன் நரகம் போவான்
நல்ல சுடும் வெயில் காலத்தில் அளந்து இருக்கலாம் போல
விருத்தாசலம்: நிலம் அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்,68; இவர், அதே கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார்.அதன்பேரில், நிலத்தை அளவீடு செய்ய தொரவளூர் வி.ஏ.ஓ.,வான பண்ருட்டி, எல்.ஆர்.,புரம் தனசேகர்,33; ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.இதுகுறித்து வேலாயுதம், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுறுத்தலின் பேரில், நேற்று மதியம் 2:00 மணிக்கு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் இருந்த தனசேகரிடம், ரசாயனம் தடவிய பணத்தை, வேலாயுதம் கொடுத்தார்.அப்போது, அங்கு பதுங்கியிருந்த டி.எஸ்.பி., சத்தியராஜ் தலைமையிலான போலீசார், தனசேகரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.
இவன் நரகம் போவான்
நல்ல சுடும் வெயில் காலத்தில் அளந்து இருக்கலாம் போல