உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேணுகோபாலன் அலங்காரம்

வேணுகோபாலன் அலங்காரம்

பண்ருட்டி : திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் உற்சவர் பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையொட்டி நேற்று காலை விஸ்வரூப தரிசனம், நித்யபடி பூஜை நடந்தது. மூலவர் ரங்கநாத பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை நடைதிறப்பு, மூலவர் ரங்கநாத பெருமாள் பூவங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் பெருமாள், வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை