கம்பி திருடியவர் கைது
புவனகிரி: டிரான்ஸ்பார்மரில் காப்பர் கம்பி திருடியவரை போலீசார் கைது செய்தனர். புவனகிரி சப் இன்ஸ்பெக்டர் லெனின் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கீரப்பாளையம் சென்ற போது, சந்தேகும்படி நின்றிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கீரப்பாளையம் ஜே.ஜே.நகரை சேர்ந்த துரை, 32; என்பதும், சாத்தப்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் உள்ள டிரான்ஸ்பார்மில் காப்பர் கம்பி திருடியதையும் ஒப்புக் கொண்டார். உடன், அவரை போலீசார் கைது செய்தனர்.