உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 

புதுச்சேரி மதுபாட்டில் விற்ற பெண் கைது 

கடலுார் : புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கடலுார், கேப்பர்மலை, சின்னையன் காலனியில் புதுச்சேரி மதுபாட்டில் விற்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்றிரவு 7:30 மணிக்கு விரைந்து சென்று, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் மனைவி புனிதா,40; என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 90 மி.லி., அளவுள்ள 200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை