உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

கடலுார்: மாவட்டத்தில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலுார் மாவட்டத்தில் பட்டாசு கடை நடத்த விரும்புவோர், (https://www.tnesevai.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது மற்றும் நிராகரிக்கப்பட்ட தகவலை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.மேலும், அனுமதியின்றி, உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி