கொலை மிரட்டல் வாலிபர் கைது
குள்ளஞ்சாவடி: போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை அண்ணா பாலம் அருகே ரோந்து சென்றனர். அப்போது சாலையின் நடுவே கத்தியுடன் அகரம், ரோட்டு தெரு அஸ்வின்,23; என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகராறு செய்தார். அவரை போலீசார் பிடித்தபோது, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து அஸ்வினை கைது செய்து, விசாரிக்கின்றனர்.