உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

மந்தாரக்குப்பம், : மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ரயில்வே பாதையில் ரயில் மோதி வாலிபர் இறந்தார்,மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி ரயில்வே பாதையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் உடல் சிதைந்து நிலையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் பெரியாக்குறிச்சி பக்தா நகரை சேர்ந்த கார்த்திக், 35; என்பது தெரியவந்தது. அவர் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை