உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / நான்கு வழிச்சாலை பணிகளைவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

நான்கு வழிச்சாலை பணிகளைவிரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அரூர்: முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தில், 59 கோடி ரூபாய் மதிப்பில், திருவண்ணாமலை-அரூர் (வழி) தானிப்பாடி சாலையை, இருவழி தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்துதல் மற்றும் மேம்பாடு செய்தல் பணி நடக்கிறது.சேலம் வட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் சாலைப்பணியின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ