மெழுகு ஆப்பிள் விற்பனை11 கடைகளுக்கு அபராதம்
'மெழுகு' ஆப்பிள் விற்பனை11 கடைகளுக்கு அபராதம்ஓசூர்:ஓசூரில், உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று, 21 பழக்கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, 11 கடைகளில் ஆப்பிள் நீண்ட நாட்கள் கெட்டு போகாமல் இருக்க, மெழுகு பூசியிருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறையினர், கடை உரிமையாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். ஆப்பிள் மீது பூசப்பட்டிருந்தது கெமிக்கல் மெழுகு என தெரிவித்த அதிகாரிகள், கடைகளுக்கு சப்ளை செய்த நிறுவனத்திற்கு, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தெரிவித்தனர்.