கோபிநாதம்பட்டி கூட்ரோடு பஸ் ஸ்டாப்பில் விபத்து அபாயம்
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து, சேலம் செல்லும், 4 வழிச்சாலையில், 9வது கி.மீ., துாரத்தில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு தென்கரைகோட்டை, பொம்மிடி மற்றும் அரூர் செல்லும் இடங்களுக்கான பஸ் நிறுத்தம் வெவ்வேறு இடங்களில் இருந்தபோதும், ஒரே இடத்தில் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும், பயணிகள் பஸ்சில் ஏற செல்லும்போது விபத்து ஏற்படும் நிலையுள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.