உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3.65 லட்சத்துக்கு ஏலம்

பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3.65 லட்சத்துக்கு ஏலம்

தர்மபுரி: தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், நேற்று விவசாயிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், 46 பேரும் நேற்று, 16 பேரும் ஏலத்துக்கு வந்திருந்தனர். இவர்கள், 23 குவியல்களாக, 810 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். இது, 298 முதல், 575 ரூபாய் வரை சராசரியாக, 450 ரூபாய்க்கு ஏலம் போனது. இவற்றின் மொத்த மதிப்பு, 3.65 லட்சம் ரூபாய். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் அரசுக்கு, 5,470 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை