உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தர்மபுரியில் 2 நாட்களில் 232 டன் குப்பை அகற்றம்

தர்மபுரியில் 2 நாட்களில் 232 டன் குப்பை அகற்றம்

தர்மபுரி: ஆயுத பூஜையையொட்டி, தர்மபுரி நகராட்சி பகுதிகளில், 2 நாளில், 232 டன் குப்பையை நகராட்சி துாய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த, 2 நாட்கள், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதற்காக, வாழைமரம், மா இலைகள், பூ மாலை, சாம்பல் பூசணி உள்ளிட்டவை பூஜைக்கு பயன்படுத்தப்பட்டது. இதற்காக சாலையோரங்களில் வைத்து வாழைமரம், வெண்பூசணி, மா இலைகள் விற்பனை நடந்தது. அதன்பின் விற்பனை முடிந்த-வுடன், மீதமானதை வியாபாரிகள் ஆங்காங்கே அப்படியே விட்டு சென்றனர். இதை தர்மபுரி நகராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று முன்தினம், 82 டன் குப்பையை அப்புறப்படுத்தினர்.தொடர்ந்து நேற்று, 150 டன் குப்பை என, கடந்த, 2 நாளில், 232 டன் குப்பை அப்புறப்படுத்த பட்டது. நேற்று காலை, 5:00 மணி முதல், துாய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தர்மபுரி நகராட்சி கமிஷ்னர் சேகர் மற்றும் துப்புரவு அலுவலர், துப்புரவு ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு, தர்ம-புரி நகராட்சியில் குவிந்த குப்பையை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !