ரூ.48.45 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை
ரூ.48.45 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனைஅரூர்:அரூர், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று, 48.45 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் ஏலம் நடந்தது.தர்மபுரி மாவட்டம், அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 14,739 ரூபாய், குறைந்தபட்சமாக, 10,799 ரூபாய்க்கு விற்பனையானது. கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 13,000 ரூபாய், குறைந்தபட்சமாக, 9,579 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 21.45 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே போல், அரூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் இருந்து, 103 விவசாயிகள், 465 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், விரலி மஞ்சள் ஒரு குவிண்டால், அதிகபட்சமாக, 15,802 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக, 11,009 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கிழங்கு மஞ்சள், ஒரு குவிண்டால் அதிகபட்சமாக, 14,402 ரூபாய், குறைந்தபட்சமாக, 10,102 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 27 லட்சம் ரூபாய்க்கு மஞ்சள் விற்பனையானது.