உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.30 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

ரூ.30 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

பாப்பிரெட்டிப்பட்டி,தர்மபுரி மாவட்டம் பொம்மிடி நேற்று வெற்றிலை வாரச்சந்தை நடந்தது. இதில், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தையில், பொம்மிடி, கே.என்.புதுார், முத்தம்பட்டி, கேத்துரெட்டிப்பட்டி, உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், 128 கட்டுகளை கொண்ட, ஒரு மூட்டை வெற்றிலை, கடந்த வாரம், 7,000 முதல், 16,000 ரூபாய் வரை விற்பனையானது. நேற்று, 7,000 முதல், 19,000 ரூபாய்க்கு விற்றது. கடந்த வார்த்தை விட, 3,000 ரூபாய் அதிகமாக விற்பனையானது. சந்தையில், நேற்று மொத்தம், 220 வெற்றிலை மூட்டைகள், 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை