உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

அரூர், தர்மபுரி மாவட்டம், சித்தேரி பஞ்., பேரேரியை சேர்ந்தவர் மாதேஷ், 27, விவசாயி; இவரது மனைவி அனிதா, 26. இவர்களுக்கு இதழினிகா என்ற, 7 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் மதியம், 12:00 மணிக்கு அனிதா தனது குழந்தையை கையில் வைத்திருந்தார். அப்போது, கிணற்றின் அருகில் இருந்த மாட்டு கொட்டகையில் இருந்து, வெளியில் வந்த மாட்டை அனிதா பிடிக்க சென்ற போது, நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில், அனிதாவின் கையில் இருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்தது. இதில் பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை