மேலும் செய்திகள்
முகாமில் 87 மனுக்களுக்கு தீர்வு
29-May-2025
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் நடந்த, குறைதீர் முகாமில், 97 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்கள் மனுக்கள் மீதான, குறைதீர் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் பிரதிவாரம் புதன்கிழமை நாட்களில் நடக்கிறது.தர்மபுரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்வரன் தலைமையில், நேற்று நடந்த குறைதீர் முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 97 மனுக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும், புதிதாக, 52 மனுக்கள் பெறப்பட்டது. இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், ஸ்ரீதரண், டி.எஸ்.பி., சிவராமன், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
29-May-2025