உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வத்தல் மலையில் மண் சரிவு: தொடரும் சீரமைப்பு பணி

வத்தல் மலையில் மண் சரிவு: தொடரும் சீரமைப்பு பணி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கொண்டகரஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட வத்-தல்மலையில் கடந்த, டிச., 1 இரவு பெய்த கன மழையில், மறுநாள் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு, வத்தல்மலை அடிவா-ரத்தில் இருந்த தரைபாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்-டது. இதனால் சாலை துண்டிக்கப்பட்டதால், வாகன போக்குவ-ரத்து முற்றிலும் தடைபட்டது. வத்தல்மலை மக்கள் அத்தியாவ-சிய தேவைகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு அங்கிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தற்காலிக தரைபாலம் அமைக்கப்பட்டது. மேலும், வத்தல்மலையிலுள்ள, 24 கொண்டை ஊசி வளைவு-களில், 7 முதல், 13 வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில் அதிக மண் சரிவும், 18 முதல், 22 வரையிலான கொண்டை ஊசி வளைவுகளில் பெரிய அளவிலான பாறைகள் உருண்டு விழுந்-ததும், 15 கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவும் ஏற்பட்-டது. இதை கொண்டகரஹள்ளி பஞ்., நிர்வாகத்தின் மூலம், பொக்லைன் இயந்திரம் கொண்டு சீரமைக்கும் பணி நடந்து வந்-தது.மண் சரிவுகளை அப்புறப்படுத்தும் பணி தாமதமானதால், போக்-குவரத்து முற்றிலும் தடைபட்டு, 10 கிராம மக்கள் முடங்கினர். மேலும், தர்மபுரியில் இருந்து வீடுகளுக்கு செல்வோர் போக்குவ-ரத்து வசதியில்லாததால், மண் சரிவுகளுக்கு இடையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. நேற்று முன்தினம் அப்பகுதியை பார்வையிட்ட தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அறிவுறுத்தலின் படி, 3 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் துரித-படுத்தப்பட்டன. பணிகளை கொண்டகரஹள்ளி பஞ்., தலைவர் தங்கராஜ் மற்றும், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர். இன்று பைக் மற்றும் கார்கள் செல்லும் அளவிற்கு சாலை சீர்செய்யப்படும். ஓரிரு நாட்களில் பஸ் போக்-குவரத்து தொடங்க வாய்ப்புள்ளது என பஞ்., தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !