இருளர் இன மக்களுக்கு அமைச்சர் நிவாரண உதவி
இருளர் இன மக்களுக்குஅமைச்சர் நிவாரண உதவிபாப்பிரெட்டிப்பட்டி, டிச. 2---பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பூதநத்தம், குண்டல்மடுவு இருளர் காலனியில் மழையால் பாதித்த, 50 குடும்பங்களுக்கு, உணவு பொருட்கள், போர்வைகள் அடங்கிய தொகுப்புகளான, நிவாரண பொருட்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வழங்கினார். இதில், கூடுதல் கலெக்டர் கவுரவ் குமார், தாசில்தார் வள்ளி, ஆர்.ஐ., விமல், தர்மபுரி, தி.மு.க.,மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சரவணன், முத்துக்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.