உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கழுத்தை நெரித்துக் கொன்று மூதாட்டி கொடூர கொலை

கழுத்தை நெரித்துக் கொன்று மூதாட்டி கொடூர கொலை

அரூர்:அரூர் அருகே கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆட்டையானுாரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மனைவி கம்சலா, 70. நேற்று காலை, 11:00 மணிக்கு மாட்டிற்கு புல் அறுக்க தோட்டத்திற்கு சென்றவர் மதியம், 3:00 மணியாகியும் வீடு திரும்பவில்லை. அதே பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரின் மரவள்ளிகிழங்கு தோட்டத்தில் நெற்றியில் காயமும், மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில், கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது காதிலிருந்த தங்கத்தோடு திருடு போகவில்லை.மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்கர் விசாரித்தனர். மோப்ப நாய் ரேடோ சிறிது துாரம் ஓடி விட்டு நின்றது. நிலப்பிரச்னை அல்லது முன்விரோதத்தில் கம்சலா கொலை செய்யப்பட்டரா என, அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ