உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஒகேனக்கல்லில் அதிக நீர்வரத்து ஆற்றில் குளிக்க மக்கÓïளுக்கு தடை

ஒகேனக்கல்லில் அதிக நீர்வரத்து ஆற்றில் குளிக்க மக்கÓïளுக்கு தடை

ஒகேனக்கல்: ஒகேனக்கல் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு, 18,000 கன அடியாக இருந்ததால், காவிரியாற்றில் மக்கள் குளிக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையால், கர்நாடக அணைக-ளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பியதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் உபரி நீர் காவிரியாற்றில் வெளியேற்றப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 18,000 கன அடி நீர்வ-ரத்து இருந்தது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினிபால்ஸ், ஐந்தருவி, ஐவர்பானி உள்ளிட்ட அருவி-களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்து அதிக-ரிப்பால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் குளிக்க, பொதுமக்களுக்கு தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்-ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி