உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நாகனுார் பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து, கருப்பு கிரானைட் கற்கள் கடத்துவதாக, பாலக்கோடு தாசில்தார் ரஜினிக்கு கிடைத்த தகவலை அடுத்து, நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, இரண்டு லாரிகளில் கருப்பு கிரானைட் கற்களை பொக்லைன் மூலம் ஏற்றுவது தெரியவந்தது. இதையடுத்து லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை தாசில்தார் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தார்.பஞ்சப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !