உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கற்றல் திறனில் மாணவர்கள் சிறப்பு செயல்பாடு

கற்றல் திறனில் மாணவர்கள் சிறப்பு செயல்பாடு

தர்மபுரி:தர்மபுரி ஒன்றியம், கே.நடுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட நாகசேனஹள்ளியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் முதற்கட்டமாக, ஒன்றாம் வகுப்பு முதல், 3ம் வகுப்பு வரை, 2ம் கட்டமாக, 4 முதல், 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, 100 நாள் சேலஞ்சில், 100 சதவீதம் தமிழ், ஆங்கிலம், வாசித்தல், எழுதுதல் மற்றும் கணித அடிப்படை திறன்கள் மதிப்பீட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.இதில், வட்டார கல்வி அலுவலர் நாசர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் மோகன், தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர்களின் கற்றல் திறன் சோதிக்கப்பட்டதில், மாணவர்கள் சிறந்த முறையில் வாசித்துக் காட்டினர். சிறப்பாக, செயல்பட்ட மாணவர்களை, வட்டார கல்வி அலுவலர் பாராட்டினார். இதில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ