உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

தர்மபுரி :தர்மபுரி மாவட்டம், தொப்பூர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., பிரபாகரன், நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது, சாமிசெட்டிப்பட்டி பகுதியில் மது விற்ற சேட்டு, 45, என்பவரை கைது செய்து, 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார். அதேபோல், மதிகோன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., இளமதி நேற்று முன்தினம், லாலாகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கார்த்திக், 30, என்பவரை கைது செய்து, 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !