அடிப்படை வசதிகளின்றி தவிப்பு குப்பநத்தம் கிராம மக்கள் புகார்
ஊத்தங்கரை :கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம் நடுப்பட்டு பஞ்., குப்பநத்தம் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு முறையான குடிநீர் வசதி இல்லை, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பற்றாக்குறை உள்ளது, அப்பகுதி ஏரியிலுள்ள கிணற்றை பல வருடங்களாக துார்வாராமல் அப்படியே குடிநீர் வழங்குவதால், குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவி வருகிறது, அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை, அங்கன்வாடி கட்டடம் சேதமானதால் இடித்து பல மாதங்களாக மாற்று கட்டடத்தில் குழந்தைகள் உள்ளனர். மேலும் 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் இக்கிராமத்தில், சுடுகாட்டிற்கு, 15 சென்ட் இடம்தான் ஒதுக்கியுள்ளனர். புறம்போக்கு இடம் நிறைய உள்ளது, அந்த இடத்தில் கூடுதலாக இடம் ஒதுக்கி வழிப்பாதை ஏற்படுத்தி தரவேண்டும், மின் கம்பங்களில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக உள்ளது, எதிர்பாராத விதமாக கைகளை மேலே துாக்கினால் உயிர் சேதம் ஏற்பட்டு விடும், நுாலக கட்டடம் மட்டும் உள்ளது, நிறைய படித்த இளைஞர்கள் உள்ளனர். நுாலகத்திற்கு தேவையான அடிப்படை வசதி செய்து தர வேண்டும்.எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத, எங்கள் கிராமத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர, குப்பநத்தம் கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.