மகளிர் தினத்தையொட்டி பெண்களுக்கு விருது
இண்டூர்: தர்மபுரி மாவட்டம், இண்டூரிலுள்ள தனியார் கல்லுாரியில், சர்வ-தேச மகளிர் தினத்தையொட்டி, இணைந்த கரங்கள் அமைப்பின் மூலம், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும், 50 பெண்க-ளுக்கு, 'வீர மங்கை விருது' வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில், மருதம்நெல்லி குழுமத்தின் செயலாளர் காயத்ரி தலைமை வகித்து விருது வழங்கினார். அமைப்பின் நிறுவனர் சிலம்பரசன் பேசினார். மாவட்ட செவி-லியர் சங்க தலைவி ராஜேஸ்வரி, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலு-வலர் உலகநாதன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி, நற்சுவை சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கான்கிரீட் கல் சரிந்து