உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புதைத்த சிசுக்களின் எலும்பை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளி

புதைத்த சிசுக்களின் எலும்பை போலீசிடம் ஒப்படைத்த தொழிலாளி

பாலக்காடு: காதலித்தபோது பிறந்த இரண்டு சிசுக்களை கொன்று, குழி தோண்டி புதைத்த தொழிலாளி, தற்போது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அந்த சிசுக்களின் எலும்பை தோண்டி எடுத்து போலீசில் ஒப்படைத்தார். அவரிடம் விசாரணை நடக்கிறது.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புதுக்காடு வெள்ளிக்குளங்கரையை சேர்ந்தவர் பவின், 26; கூலித்தொழிலாளி. அவர், புதுக்காடு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, அவரும், அவரது காதலி அனீஷா, 22, என்பவரும், இரு சிசுக்களை குழிதோண்டி புதைத்ததாகவும், அந்த சிசுக்களின் எலும்புகள் உள்ளன என்றும் கூறி, பையில் கொண்டு வந்த எலும்பை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுக்காடு போலீசார், இருவரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கின்றனர்.திருச்சூர் ரூரல் எஸ்.பி., கிருஷ்ணகுமார் கூறியதாவது:பவினிடம் நடத்திய விசாரணையில், வழக்கில் சம்பந்தப்பட்ட இருவரும், எட்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இது இரு வீட்டாருக்கும் தெரியாது. 2021ல் இவர்களது தொடர்பில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. தொப்புள் கொடி கழுத்தில் சுற்றி இறந்தே பிறந்த குழந்தையை, பெண்ணின் வீட்டு வளாகத்தில் இருவரும் சேர்ந்து குழி தோண்டி புதைத்துள்ளனர்.அதேபோல, 2024ல் மீண்டும் அனீஷா கர்ப்பமானார். அப்போது பிறந்த ஆண் குழந்தையை, கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அந்த குழந்தையையும் இருவரும் சேர்ந்து குழி தோண்டி புதைத்தனர். பின், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். மனமுடைந்த பவின், குழி தோண்டி புதைத்த இரு சிசுக்களின் எலும்புகளை, பையில் எடுத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ