60 ஆண்டு கால ஆக்கிரமிப்புகள் அகற்றம்
வடமதுரை: வடமதுரையில் காந்தி சிலையை சுற்றிலும் 60 ஆண்டுகளுக்கு முன்பு பலரும் கடைகள் அமைத்து ஆக்கிரமித்திருந்தனர். இதை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் முயற்சித்தபோது பல ஆண்டு அனுபவத்தால் இடம் எங்களுக்கு சொந்தம் என வழக்கு தொடர்ந்தனர். சிறிய தொகையை மட்டும் வாடகையாக செலுத்தி 25 ஆண்டுகளாக ஆக்கிரமிப்புதாரர்கள் வழக்கு நடத்தினர். தீர்ப்பு சாதகமாக வர தரை வாடகை அடிப்படையில் 10 கடைகள் நடத்த ஏலம் முடித்தது. செயல் அலுவலர் பத்மலதா, ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.