உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது குடித்து இருவர் இறந்த வழக்கில் 9 பேர் விடுதலை

மது குடித்து இருவர் இறந்த வழக்கில் 9 பேர் விடுதலை

திண்டுக்கல்: அம்மையநாயக்கனுார் பகுதியில் மது குடித்து இருவர் இறந்த வழக்கில் 9 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.கொடைரோடு அம்மையநாயக்கனுார் பகுதியை சேர்ந்தவர்கள் முருகன், சாய்ராம். 2018ல் ரோட்டோரத்தில் மதுவிற்றவரிடம் மதுபானம் வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். அம்மையநாயக்கனுார் போலீசார் விசாரணையில் மதுபானத்தில் ரசாயனம் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து மதுபானம் விற்ற அம்மையநாயக்கனுாரை சேர்ந்த ஜெயச்சந்திரன் 45, ராஜா, ராஜூ, தமிழ்வாணன், கண்ணன், டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராஜலிங்கம் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது திண்டுக்கல் தீண்டாமை தடுப்பு வன்கொடுமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் தமிழ்வாணன், கண்ணன் இறந்தனர்.மீதமுள்ள 9 பேர் மீது வழக்கு நடந்தது. தகுந்த ஆதாரங்களுடன் அரசு தரப்பு நிரூபிக்க வில்லை. இதையடுத்து 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ