வழிப்பறி வாலிபருக்கு கால் முறிவு
திண்டுக்கல்:திண்டுக்கல் -- பழநி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி35. இவர் நடந்து சென்ற போது திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார்22, கத்தியை காட்டி மிரட்டி அலைபேசி, பணத்தைப் பறித்து சென்றார். தாடிக்கொம்பு போலீசார் முகேஷ்குமார் பதுங்கியிருந்த இடத்திற்கு சென்றனர். போலீசாரை கண்டதும் முகேஷ்குமார் தப்பி ஓட முயன்றார். அப்போது தவறிவிழுந்ததில் இடது கால் முறிந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.