உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் ஆவணி விழா திருக்கல்யாணம்

பாலசமுத்திரம்: பழநி பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா திருக்கல்யாணம் நடந்தது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரம்மோற்ஸவ விழா செப்.2ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.1 2 வரை நடக்கும் விழாவில் நேற்று மாலை அகோபில வரதராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் மாலை மாற்றுதல், கோத்திரம் கூறுதல் நடைபெற்றது. பக்தர்கள் பாடல்கள் பாடி, ராம நாமம் ஜபித்து கலந்து கொண்டனர். இன்று இரவு பாரிவேட்டை, செப். 10 காலை 7:00 மணிக்கு தேர் வடம்பிடித்தல் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை