கொடைக்கானலில் மேலும் ஒரு அருவிக்கு செல்ல தடை
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசால் அனுமதிக்கப்படாத வன அருவிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல கலெக்டர் சரவணன் தடை விதித்துள்ள நிலையில் மேலும் ஒரு அருவிக்கும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் அருகே வில்பட்டி பேத்துப்பாறை பகுதியில் உள்ள அஞ்சு வீடு அருவியில் பத்துக்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அக்., 18ல் பொள்ளாச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுாரி மாணவர் ஒருவர் பலியானார். அதன்பின் அந்த அருவிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் போலுார் புலவாச்சி அருவிக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இங்கு சென்று பார்வையிட, குளிக்க முற்படும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.