உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

செம்பட்டி: காமுபிள்ளைசத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியர் இளம்பருதி வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகள், கோஷங்களுடன் ஊர்வலம் சென்றனர். ஆசிரியர்கள் சோபனா, இலக்கியா, சரவணவேல் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜய் ஏற்பாடுகளை செய்திருந்தார்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !