தாமதமாக நடக்கும் பாலம் பணி
பண்ணைக்காடு: பண்ணைக்காடு ஊத்து பிரிவு இடையே ரோடு அமைக்கும் பணி தொடங்கியது. ரோடுகள் அமைக்கப்பட்ட நிலையில் பாலம் அமைக்கும் பணி துரிதமாக நடக்காமல் கிடப்பில் உள்ளது. குறுகிய ரோட்டில் வாகனங்கள் விபத்திற்குள்ளாகின்றன. இதன் அருகே உள்ள நுாலகம்,அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்வதில் சிக்கல் உள்ளது. தாமதமாக நடக்கும் பாலம் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.