உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குழந்தைகள் தின விழாவில் தினமலர் பட்டம்

 குழந்தைகள் தின விழாவில் தினமலர் பட்டம்

செம்பட்டி: சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் வழங்கி குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசு பொருட்களுடன் பொது அறிவு வாசிப்பு திறனுக்காக தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கினர். கேக், பிஸ்கட், இனிப்பு வகைகள், எழுதுபொருட்கள் வினியோகிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மஞ்சப்பை, மரக்கன்று ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கினர். ஏற்பாடுகளை ஆசிரியர் ராமு தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை