ஆவண எழுத்தர்கள் ஊர்வலம்
வடமதுரை: வடமதுரையில் ஆவண எழுத்தர்கள் நலச்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று வாரச்சந்தைக்கு வந்த மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க கோரி ஏப்.,8 முதல் ஆவண தயாரிப்பாளர்கள் தங்களது அலுவலகங்களை மூடி பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வாரச்சந்தை நாளான நேற்று சங்கத்தினர் ஊர்வலமாக சென்று சார்பதிவாளர் அலுவலக பிரச்னைகளை விளக்கும் துண்டு பிரசுரத்தை கடைவீதி, சந்தைக்குள் வினியோகித்தனர்.