உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  ஆவணம் தயாரிப்பாளர்கள் ஊர்வலம்

 ஆவணம் தயாரிப்பாளர்கள் ஊர்வலம்

வடமதுரை:வடமதுரையில் ஆவணம் தயாரிப்பாளர்கள் நலச்சங்கத்தினர் ஊர்வலமாக சென்று வாரச்சந்தைக்கு வந்த மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். வடமதுரை சார் பதிவாளர் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள், நிரந்தர சார்பதிவாளர் நியமிக்க கோரி ஏப்.,8 முதல் ஆவண தயாரிப்பாளர்கள் தங்களது அலுவலகங்களை மூடி பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வாரச்சந்தை நாளான நேற்று சங்கத்தினர் ஊர்வலமாக சென்று சார்பதிவாளர் அலுவலக பிரச்னைகளை விளக்கும் துண்டு பிரசுரத்தை கடைவீதி, சந்தைக்குள் வினியோகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !